மேலும் செய்திகள்
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
3 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரி வாடகை பணம் கேட்டவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் தாலுகா ராமானுஜபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராஜா, 38; கட்டட தொழிலாளி. இவர், தனது டிப்பர் லாரியை, விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த குமார்,36; என்பவருக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு, மாத வாடகை 30 ஆயிரம் ரூபாய் என பேசி, லீசுக்கு கொடுத்துள்ளார். 2 மாதங்கள் மட்டுமே வாடகையை வாங்கியுள்ளார்.அதன்பிறகு வாடகை தராமல் ஏமாற்றிய குமாரிடம், 2 தினங்களுக்கு முன் ராஜா, வாடகையை கொடு அல்லது லாரியை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், ராஜாவை தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், குமார் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
3 hour(s) ago