உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வங்கியில் தீவிபத்து

வங்கியில் தீவிபத்து

விழுப்புரம்: வளவனுார் அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியை, கடந்த 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல், அதன் ஊழியர்கள் பூட்டி சென்றனர். பின், நேற்று காலை 9:30 மணிக்கு வங்கியை ஊழியர்கள் திறந்து உள்ளே சென்றனர்.அப்போது வங்கியில் இருந்த 5 பேன்கள், 3 'ஏசி'கள் 4 கம்ப்யூட்டர்கள் என 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. வங்கி அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை