உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சோலைவாழியம்மன் கோவில் ஆடி வெள்ளி உற்சவம்

 சோலைவாழியம்மன் கோவில் ஆடி வெள்ளி உற்சவம்

மயிலம்: பாதிராப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் ஆடி வெள்ளி உற்சவம் நடந்தது.பாதிராப்புலியூர் கிராம தேவதையான சோலை வாழியம்மன் கோவில் ஆடி வெள்ளிவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள சிவபெருமான், அய்யனாரப்பன் சுவாமி, சப்த கன்னிமாரியம்மன், அய்யப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை