உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடும்பத் தகராறு ஒருவர் கைது

குடும்பத் தகராறு ஒருவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்பத் தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் ஏழுமலை, 33; இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இவரது மனைவி கோபித்துகொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.இச்சம்பவத்திற்கு தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித், 40; என்பவர் தான் காரணம் என ஏழுமலை தனது சகலை இந்திரஜித்திடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இந்திரஜித் மற்றும் அரசன் என்பவரும் ஏழுமலையை தாக்கினர்.இது குறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் இந்திரஜித், 40; அரசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து இந்திரஜித்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை