உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விஷம் குடித்து ஊராட்சி தலைவர் தற்கொலை

விஷம் குடித்து ஊராட்சி தலைவர் தற்கொலை

செஞ்சி : செஞ்சி அருகே வயிற்று வலியால் விஷம் குடித்த ஊராட்சி தலைவர் தற்கொலை செய்து கொண்டார்.வல்லம் அடுத்த தொண்டூர் ஊராட்சி தலைவர் சின்னையா, 75; இவர், சில ஆண்டுகளாக தோல் நோய் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 26ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை