உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா

 பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா

விழுப்புரம்: வளவனுார் பிரம்மாகுமாரிகள் தியான நிலையத்தில் ஆன்மீக சேவாதாரிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. வளவனுார் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் கடந்த 21 ஆண்டுகளாக ஆன்மீக சேவை செய்து வருகிறது. இங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஞான உபதேசம், ராஜயோக தியான பயிற்சி இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் தியான பயிற்சி பெறுகின்றனர். இந்த மையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சேவை செய்த ஈஸ்வரிய சேவாதாரிகளை பாராட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தியான பயிற்சி தொடர்ந்து செய்வதால், ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைப்பதாக, மைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை