குடும்ப தகராறு தம்பதி மீது வழக்கு
விழுப்புரம் : வளவனுார் அருகே தம்பியை தாக்கிய அண்ணன், அண்ணி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.வளவனுார் அருகே நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ் மகன் சங்கர், 40; இவரது சகோதரர் காமராஜ், 45; இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் 3 ஏக்கர் பூர்வீக நிலம் பாக பிரிவினை பிரச்னை உள்ளது.கடந்த 21ம் தேதி சங்கர் தனது மனைவி சுலோச்சனாவை திட்டியுள்ளார். இதை கண்ட காமராஜ், அவரது மனைவி லலிதா ஆகியோர், தங்களை தான் திட்டுவதாக நினைத்து, சங்கரை திட்டி தாக்கினர். சுலோச்சனா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் காமராஜ், லலிதா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.