உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு மீட்பு

 வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு மீட்பு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்க மகன் சுபாஷ், 23; இவரது வீட்டில் நேற்று மாலை 5 அடி நீள நாக பாம்பு புகுந்தது. தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமை யிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை