குட்டையில் தவறி விழுந்து முதியவர் பலி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் தனபால்,70; லாரி டிரைவர். தனிமையில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, வீட்டின் பின்னால் இருந்த குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் முழுகினார். நேற்று காலை அவரது உடல் குட்டையில் மிதந்தது.விக்கிரவாண்டி போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரது மகள் கல்பனா புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.