உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு

வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே வீட்டு மனை தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மேல்மலையனுார் அடுத்த தாதங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி, 60; அதே ஊரை சேர்ந்தவர் கனகசபை, 50; இவர்களுக்குள் வீட்டு மனை தொடர்பாக முன் விரோதம் உள்ளது.கடந்த 14ம் தேதி இரவு, இரு தரப்பினரும் தகராறு செய்து தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ