உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தில் இளம்பெண் பலி

தீ விபத்தில் இளம்பெண் பலி

விழுப்புரம் : வளவனூர் அருகே தீ விபத்தில் காயமடைந்த இளம்பெண் இறந்தார். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த வி.புதூர் கிராமத்தை சேர்ந்த வேலு மனைவி தேவி,25. இவர் கடந்த 26ம் தேதி ஸ்டவ் பற்ற வைத்த போது திடீரென அவரது சேலையில் தீப்பிடித்தது. பலத்த காயமடைந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை