உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சேஷ வாகனத்தில் தீவனூர் பெருமாள்

சேஷ வாகனத்தில் தீவனூர் பெருமாள்

திண்டிவனம்:புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு தீவனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு, வீதியுலா நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆதிநாராயணப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு ஹோமம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலை 7 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். பூஜைகளை ராமானுஜதாசர் செய்தார். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை