உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் செய்தி குறிப்பு;இக்கல்லூரியில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.இதன்படி ஜூன் 24ல் கணினி அறிவியலில் 260 முதல் 172 கட் ஆப் வரை உள்ளவர்களுக்கும்,ஜூன் 25ல் வணிகவியலில் 340 முதல் 143 கட் ஆப் வரை உள்ளவர்களுக்கும்,ஜூன் 26ல் தமிழில் 70 முதல் 36 கட் ஆப் வரையும் உள்ள மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.அதில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு கணிதம் படித்த மாணவர்களுக்கு கணித பாடத்திலும், பிற அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில பிரிவில் இடமிருக்கும் பட்சத்தில் மாணவர் சேர்க்கை கொடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ