உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிருஷ்ணன்கோவிலில் பாலத்தில் தலைகீழாக கவிழ்ந்த கார்

கிருஷ்ணன்கோவிலில் பாலத்தில் தலைகீழாக கவிழ்ந்த கார்

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் அருகே பாலத்தில் கார் தலை கீழாக கவிழ்ந்ததுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணன் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வி.பி.எம்.எம்., கல்லூரி அருகில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தடுப்புச் சுவர் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி மாவட்ட பதிவு எண் கொண்ட ஒரு கார் தலை கீழாக கவிழ்ந்தது. விபத்து குறித்து எவ்வித புகாரும் வராத நிலையில், காரினை ஓட்டி வந்தவர் யார் என்பதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை