| ADDED : ஆக 17, 2024 12:51 AM
விருதுநகர் : தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பு:விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காமல்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 54 கடைகள், நிறுவனங்கள், 64 உணவு நிறுவனங்கள், 13 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 131 நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேசிய விடுமுறை தினத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மூன்று நாள்களுக்குள் மாற்று விடுப்பு அளிக்கப்படாவிட்டால் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மூலம் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் இருப்பது தெரிந்தால் 1098, 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.