உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரை மட்டம்; பெண் படுகாயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரை மட்டம்; பெண் படுகாயம்

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியில் பேன்சி ரக பட்டாசுகளின் குழாய்களுக்கு கோட்டிங் கொடுக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் காயமடைந்தார். கட்டடம் தரைமட்டமானது.சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் 47. அதே பகுதியில் இவருடைய கட்டடத்தில் சந்தனமகாலிங்கம் என்பவர் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு கோட்டிங் செய்யும் பணி செய்து வருகிறார் . இங்கு நேற்று முன்தினம் இரவில் வேலை நடைபெற்று உள்ளது. அப்போது தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை அணைக்காமல் சென்றுள்ளனர்.நேற்று காலை 8:15 மணியளவில் திடீரென்று கட்டடத்தின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கட்டடம் வெடிக்கையில் கற்கள் பறந்து சென்று விழுந்ததில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி 35, காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்து நடந்த கட்டடத்தின் அருகே குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. கட்டடம் வெடித்தவுடன் சிதறாமல் அப்படியே தரைமட்டமானதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை