உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை

லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் செய்திக்குறிப்பு: மக்கள் அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க தேவையில்லை. அரசு அலுவலர்கள், மக்களிடம் பணமாகவோ, அல்லது பொருளாகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஏஜன்டுகள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவில் நேரடியாக தொடர்பு கொண்டு புகாராகவோ அல்லது தகவலாகவோ தெரிவிக்கலாம்.ரோடு போடும் போதோ, அரசு கட்டடங்கள் கட்டும் போதோ முறைகேடு ஏற்பட்டாலோ, மக்களுக்கு அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு ஏற்பட்டாலோ, மேலும் அரசு அலுவலர்கள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசையா சொத்துக்களை அவர்கள் பெயரிலோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலோ வாங்கி குவித்திருந்தாலோ, அது பற்றியும் லஞ்ச ஒழிப்புத்துறையில் நேரிலோ அல்லது மறைமுகமாகவோ புகார் தெரிவிக்கலாம்.இது போன்ற புகார்களை தெரிவிக்கும் நபர்களின் பெயர் விபரம் ரகசியம் காக்கப்படும். புகார்களுக்கு 04562 252678, 252155, 94981 05882, 94450 48975, 94981 06118 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.gmail.com, dspvnrdvac.nic.inஆகிய மின் அஞ்சல் முகவரிகளிலும் தெரவிக்கலாம். லஞ்ச புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி