உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி பி.எஸ்.ஆர்., ரோட்டில் உடைந்த குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. அதன்படி பி.எஸ்.ஆர். ரோடு வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.ஆர். ரோட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் குடிநீர் ரோட்டில் வீணாக ஓடியது. மூன்று மாதத்திற்கு மேலாக குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ஒடியதால் ரோடும் சேதம் அடைந்து விட்டது. பொதுவாகவே நகர் முழுவதும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. கோடைகாலத்தில் தண்ணீர் தேவை அதிகரிக்கும். இதுபோல் அவ்வப்போது குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அதிருப்தியில் இருந்தனர். எனவே குழாய் உடைப்பினை சரி செய்ய வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடனடியாக அங்கு உடைந்த குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை