உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்

அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்

நரிக்குடி: நரிக்குடி அருகே பனைக்குடி ரோட்டில் வந்த லாரியை வி.ஏ.ஓ., குணசுந்தரி நிறுத்தி சோதனை செய்தார். அதில 300 மூடைகள் கூழாங்கற்கள் இருந்தது.காரியாபட்டி நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் முத்துராஜை விசாரித்ததில் காரியாபட்டி கே.ஆலங்குளம் பகுதியில் இருந்து கூழாங்கற்கள் ஏற்றி அரசு அனுமதி சீட்டு இன்றி பரமக்குடிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். டிரைவர் கைது செய்யப்பட்டார். லாரியை பறிமுதல் செய்து, உரிமையாளர் முருககுமார் மீது வழக்கு பதிவு செய்து, நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை