உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்ட பொது விநியோகத் திட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் சோனையன், அலுவலர்கள்அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் வாகன சோதனை செய்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருச்சுழியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, வாகனத்தின் டிரைவர் மற்றும் ஒருவர் தப்பி ஓடி விட்டனர். வாகனத்தை ஆய்வு செய்ததில் அதில் 2 ஆயிரத்து 211 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. அரிசியை அந்தப் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை