யோகாசன பயிற்சி
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., மாணவிகளுக்கு யோகாசனம் குறித்த விழிப்புணர்வு, அடிப்படை வழிமுறைகள், பயிற்சிகளை அரசு மருத்துவக்கல்லுாரி சித்த மருத்துவர் காஞ்சனா தேவி அளித்தார். திட்ட அதிகாரி மஞ்சு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சாரதி வாழ்த்தினார். பெண்களுக்கான அர்த்த தித்திலி ஆசனம், தடாசனம், பர்வத ஆசனம் உள்பட பல்வேறு பிராணயாமம் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.