உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., முதல் எம்.எல்.ஏ., வேலாயுதன் மணி மண்டபம் குமரியில் திறப்பு

பா.ஜ., முதல் எம்.எல்.ஏ., வேலாயுதன் மணி மண்டபம் குமரியில் திறப்பு

நாகர்கோவில்:தமிழகத்தில் பா.ஜ., முதல் எம்.எல்.ஏ.,வாக தேர்வான வேலாயுதனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை, அவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் கருப்புகோட்டில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு 4 ஆயிரத்து 540 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் பால ஜனாதிபதியை தோற்கடித்து முதல் பா.ஜ., எம்.எல்.ஏ., என்ற பெருமையை வேலாயுதன் பெற்றார். கடந்த மே 8ல் வேலாயுதன் காலமானார்.அவரது சொந்த ஊரான கருப்பு கோட்டில் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டது. இதை, மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.பின் அவர் பேசியதாவது: பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்குத்தான் சித்தாந்த வேறுபாடு உள்ளது. அப்படிப்பட்ட தி.மு.க.,வின் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட, வேலாயுதன் குறித்து உயர்வாக பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலினும், அவர் குறித்து உயர்வாகவே பேசியுள்ளார்.பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என வேலாயுதன் கூறி வந்தார். நம் கட்சி அதை நோக்கி செல்லும் நிலையை பார்க்க அவர் இல்லை. அவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும், 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை