உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பின்னணியில் தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் சந்தேகம்

பின்னணியில் தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் சந்தேகம்

பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், சாலையோர சுவர்களில், 'நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது; இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்', 'இந்தியா ஒழிக' என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கலாம்; போராடலாம். ஆனால், நீட் எதிர்ப்பு என்ற போர்வையில், தேசப் பிரிவினையைத் துாண்டுவதை, எவ்விதத்திலும் ஏற்க முடியாது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.தேசப் பிரிவினையை துாண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை, தி.மு.க., அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.தி.மு.க., தனி தமிழ்நாடு என்ற பிரிவினையை, அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி. அரசியல் சட்டம் உருவான பின், பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்தால் கட்சி நடத்த முடியாது, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முடியாது என்பதால், பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனால், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை, கைவிடவில்லை.பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைக்க, தி.மு.க., 'நீட் எதிர்ப்பை ஆயுதமாக எடுத்துள்ளது. பிரிவினை சித்தாந்தத்தை துாண்டும், எந்தவொரு செயல்பாட்டையும் அனுமதிக்க முடியாது. பிரிவினை வாசகங்கள் எழுதியவர்களை கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Alagusundram KULASEKARAN
ஜூலை 03, 2024 16:40

ஒரே தீர்வு தமிழ் நாட்டை நிர்வாக வசதிக்காக மூன்று யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைக்கலாம் மாநில அரசின் அனுமதி தேவை இல்லை


Gopalakrishnan P
ஜூலை 03, 2024 14:23

நீட் நீட் என்று திமுக கதறினால் அனைவரும் காவிரி காவிரி என்று காவிரி பிரச்சினையை கிளப்பிக்கொண்டே இருந்தால் திமுக காணாமல் போய்விடும்


Kesavan
ஜூலை 02, 2024 23:50

தமிழக மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு இருந்தால் ஒன்றிய அரசோடு இணைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் சாமான்ய மக்களுக்கு கூட இருக்க வாய்ப்பு இல்லை தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்க முடியாது என்றால் இம்மாதிரியான விளைவுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க இயலாது முதலில் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள் மக்களுக்காக தான் சட்டம் சட்டத்துக்காக மக்கள் அல்ல


S.Govindarajan.
ஜூலை 03, 2024 22:13

கொள்ளை அடித்து சொத்து சேர்த்த கட்சி எது? மனதை தொட்டுச் சொல்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 03, 2024 22:28

கேசவன் அய்யா எந்த ஊரை சேர்ந்த அறிவாளி?


Tetra
ஜூலை 02, 2024 20:36

அந்த கட்சியை கூண்டோடு ஒழிக்கணும்


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 02, 2024 20:19

எழுதியவர்களை கைது செய்ய முடியாது. அவர்கள் அவ்வளவு தெளிவாக எழுதியிருந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என அறிக்கை வந்துவிடும்.


Indian
ஜூலை 02, 2024 17:34

ஆதாரமில்லாத குற்றச்சாட்டு .....முழுவதும் பொய் ...


sugumar s
ஜூலை 02, 2024 13:42

vanathi srinivasan assessment may be right. I heard sometime before VCK demanding TN as a separate country. these people are capable of creating such confusion amongst people for political gains. a team should investigate and bring such culprits into book. they should change tamil nadu to தமிழ் பிரதேசம். as the word Nadu is attached these people will do such things. if nadu is removed in long run people will also get out of such cheap politics


MADHAVAN
ஜூலை 02, 2024 12:00

தேசத்தை பிரிப்பது உங்க கும்பல்தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை