உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து

போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பேராசிரியர்கள் போலி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தை, கல்லுாரிகள் பெற வேண்டும். இதற்காக, தேவைக்கேற்ப பேராசிரியர்கள் பணியில் இருப்பது போலவும், முறையான விளம்பரங்கள் செய்தது, நியமனம் நடந்தது போலவும், தனியார் கல்லுாரிகள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.இவ்வாறு, 353 பேராசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது கண்டறியப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்ட கல்லுாரிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையிலான குழு கூறியுள்ளது.இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்லுாரிகள் மற்றும் அந்த கல்லுாரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு கவர்னர் ரவி உத்தரவிட்டு உள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால், கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை

'என் பெயரில் போலியான அறிவிப்புகள் வெளிவருகின்றன; அவற்றுக்கு பதில் அளிக்காமல் புகார் அளியுங்கள்' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: நான், 'வாட்ஸாப்' செய்தி அனுப்புவது போல, சில மோசடி நபர்கள், போலியான பக்கத்திலிருந்து தகவல்களை அனுப்புகின்றனர். என் பெயர், புகைப்படம், மின்னஞ்சல் முகவரிகளை வைத்து ஏமாற்றுகின்றனர். இதுபோல, என் பெயரில் ஏதாவது தகவல்கள் வந்தால், அதற்கு பதிலளிப்பதற்கு பதில், 'ஸ்கேம், பிராட், பிளாக்' என்று, புகார் அளியுங்கள்.அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளில், போலியான பேராசிரியர்கள் விபரங்கள் வெளியிட்டு ஏமாற்றுவதாகவும் தகவல் வந்துள்ளது. பல்கலையின் போர்ட்டலில், இணைப்பு கல்லுாரிகள், பேராசிரியர்கள் குறித்த விபரங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.அதனால், தனியார் இணையதளங்களில் உள்ள போலி செய்திகளை கண்டறிந்து, விழிப்புணர்வுடன் இருங்கள். மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramalingam Shanmugam
ஜூலை 29, 2024 11:15

கொடுத்த லஞ்சம் அதோகதி


GOPAL MURALI
ஜூலை 29, 2024 10:25

முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால்?


Ravi Kumar
ஜூலை 29, 2024 10:22

நல்லது, இதே போல மருங்து கடை, மருந்தியல் கல்லுரிகள் சிறிது நடவடிக்கை வேண்டும். மூன் லைட் இரட்டை சம்பளம் பெற்றுகொண்டு இருக்கிறார்கள். சட்டம் ஓழங்கு. இல்லை . D.V.A.C. நடவடிக்கை வேண்டும் .


Indhuindian
ஜூலை 29, 2024 10:19

Withdrawl of recognition is the right way of penalising the erring institutions. But this should be done prospectively and should not affect the gullible students who are already studying in these colleges unless the AICTE or any other relevant agency and the State Government makes nate arrangments to shift the exising students. Also the ongoing engineering counselling should be deferred till the issue is sorted out or the admitted students should not be asked to pay the fees till the matter is sorted out. Also the matter of recognition of several engineering students should be clearly displayed at the counselling centres and on the display screens in those centres


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 29, 2024 10:17

போலி கணவர்கள், போலி மனைவியர், போலி டாக்டர்கள் என்று பல போலிகள் இருக்கும்போது போலி பேராசிரியர்கள் இருந்தால் என்ன தவறு? இருந்துவிட்டுப் போகட்டுமே எப்படி இருந்தாலும் இந்த போலி பேராசிரியர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாலும் அவர்களுக்கு எந்த தண்டனையும் வந்து விடாமல் காப்பது கழகத்தின் இலட்சியமாகவே இருக்கும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 29, 2024 09:31

ஊழலின் ஊற்றுக்கண் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் திருட்டு திராவிடிய கூட்டத்தை?


Duruvesan
ஜூலை 29, 2024 08:52

ஆக தேனும் பாலும் ஓடும் விடியலின் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சதி .இதுக்கு தான் அன்னைக்கே அவரை போயா னு திட்டினார். விடியல் சாரே எப்போ அடுத்த போராட்டம்


Sankar Ramu
ஜூலை 29, 2024 08:18

உதயநிதி எல்லாம் அண்ணா பல்கலை சின்டிகேட். அப்புறம் எப்படி இருக்கும்?


Prabakaran J
ஜூலை 29, 2024 07:12

Indirect way to increase the bribe amount.


rama adhavan
ஜூலை 29, 2024 05:53

அக் கல்லுரிகளில் ஆசிரியர்களுக்கு ஏன் பயோ மெட்ரிக், இரிஸ் ஸ்கேன்னிங் முறை நடைமுறை படுத்தவில்லை? முறைகேட்டில் கல்லூரியும் உடந்தை போல் உள்ளது. அண்ணா பல்கலை கழகமும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். துறை மந்திரியும் பொறுப்பு ஏற்க வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை