| ADDED : ஆக 18, 2024 03:03 AM
திருப்பூர்:சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டியில் பொருள் மாற்றப்பட்டு, இரண்டு இளநீர் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்பிரமணியர் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில் தோன்றி குறிப்பிடும் பொருட்களை, இறைவன் உத்தரவாக ஏற்று, உத்தரவு பெட்டியில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.ஏப்.,28 முதல், சிறிய வேல் வைத்து பூஜை நடந்து வந்தது.நேற்று ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பொருள் மாற்றப்பட்டு இரண்டு இளநீர் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், 'அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்க விழா நடந்த நாளில், உத்தரவுபெட்டியில் இளநீர் வைக்கப்பட்டுள்ளது. 'இறைவனின் அபிஷேகபொருளாக இளநீர் இருப்பதால், வறட்சி நீங்கி, தாகம் தணியும் என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது' என்றனர்.