உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுபான்மையினர் ஆணைய தலைவரானார் ஜோ அருண்

சிறுபான்மையினர் ஆணைய தலைவரானார் ஜோ அருண்

சென்னை:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பதவிக் காலம் நிறைவடைந்ததைத்தொடர்ந்து, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆணையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.ஆணையத்தின் புதிய தலைவராக, 'லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்' நிறுவனத்தின் இயக்குனர் ஜோ அருண் நியமிக்கப்பட்டு உள்ளார். துணைத்தலைவராகஅப்துல் குத்துாஸ் என்ற இறையன்பன் குத்துாஸ்; உறுப்பினர்களாக ஹாமில்டன் வெல்சன், சொர்ணராஜ், நாகூர் நஜிமுதீன், பிரவீன்குமார் தாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், முகமது ரபீ, வசந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள்.இதற்கான அரசாணையை, சிறுபான்மையினர் நலத்துறை செயலர்விஜயராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவராக பெர்னாண்டஸ் ரத்னராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை