உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் ஓய்வு நீதிபதி சந்துரு அறிக்கை

ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் ஓய்வு நீதிபதி சந்துரு அறிக்கை

திண்டுக்கல் : ''ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கைகளை அளித்துள்ளார்,'' என, திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டமாக கூறினார்.அவர் கூறியதாவது : ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்கள் இருந்தன. திப்பு சுல்தான் படையெடுப்பு காலத்தில் விக்ரகங்கள் அகற்றப்பட்டன. தற்போது அபிராமி அம்மன் கோயிலில் உள்ளன. மீண்டும் மலைமீது அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்களை நிறுவ வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு ஹிந்து முன்னணி ஆதரவு அளிக்கிறது. இதற்காக ஜூலை 5 முதல் 20 வரை கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளோம். அரசியல் கட்சிகள் ஓட்டுகளுக்காக பயப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் ஹிந்து முன்னணி களத்தில் நிற்கும்.ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு மாணவர்கள் நெற்றியில் திலகம், பொட்டு, பூ வைக்கக் கூடாது. கைகளில் கயிறுகளை கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என பரிந்துரைகளை செய்துள்ளது. சிலுவை, தொப்பி, பர்தா அணியக்கூடாது என கூறவில்லை. ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதம் பரிந்துரை செய்துள்ள அவரது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூலிக்கு விற்பனை செய்யும் அப்பாவிகள் சிலரை கைது செய்துள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளது. போதை கடத்தலில் சிக்கிய ஜாபர் சாதிக் போல் இந்த விவகாரத்திற்கு பின்னாலும் பெரிய அரசியல் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

spr
ஜூன் 28, 2024 13:49

நெற்றியில் அணியும் சின்னங்களால் அடையாளம் காட்டப்படுவது மதம் மட்டுமே ஒன்றுமேயில்லாமல் இருந்தால் அவர்கள் இந்துக்கள் அல்ல என்பது வெளிப்படையாக அறியப்பட்ட செய்தியே ஆனால் இன்றைய நாளில் இந்துக்கள் கூட வெற்று நெற்றியுடன் அலைவது இயல்பாகிவிட்டது எனவே இதனால் பிரச்சினைகள் தீராது. அரசே சாதீய அடிப்படையில்தான் நலத்திட்டங்களை வெளியிடுகிறது சலுகைகளை வழங்குகிறது இவற்றையெல்லாம் நிறுத்தினால் சாதியை முன்னிறுத்தும் போக்கு குறையும் அரசியல் கட்சிகள் சாதீய அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துகிறது இவற்றைத் தடை எய்ய முடியாத அரசு பள்ளியில் அதனைத் தவிர்க்க இயலுமா? திரு சந்துரு பரிந்துரை பலரிடம் பெறப்பட்ட கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றைத் தொகுத்து வழங்கிய ஒன்றே இதற்கும் தேர்தல் கருத்துக் கணிப்புக்கும் வேற்றுமை இல்லை பொதுவாக இது போன்ற பிரச்சினைகளில் ஒரு நபர் ஆணையம் அமைப்பது சரியல்ல அதுவும் கழக ஆதரவாளர் என அறியப்பட்ட ஒருவரிடம் வேறெந்த வகையில் எதிர்பார்க்க இயலும் கழக அரசுக்கு திரு சந்துரு மற்றுமொரு கருவி தமிழும் சமயங்களும் ஒன்றையொன்று வளர்த்தன என்பது உலகறிந்த உண்மை அவ்வகையில் இலக்கிய சிறப்புடன் கூடிய சமய நூல்களான தேவாரம், திருவாசகம் பிரபந்தம் போன்ற படைப்புக்களை இன்றைய தலைமுறை அறியாமற் செய்த கழக அரசுகள் தமிழை வளர்ப்பதாகச் சொல்வது வெறும் பித்தலாட்டம் ஆனால் பள்ளியில் கைபேசி பயன்பாடு தடை செய்யப்பட வேண்டும் அறநெறி வகுப்புக்கள் அவசியம் ஒழுக்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதனால் சந்துரு என்ற நல்ல மனிதரின் மனநிலை அறியப்படுகிறது


தமிழ்வேள்
ஜூன் 26, 2024 16:01

, பாலியல் அத்துமீறல் செய்யக்கூடாது , மீறி செய்தால் , உடனடி டிஸ்மிஸ் வேண்டும் என்று கூறவில்லையே ? ஏன் ?


Kesavan
ஜூன் 26, 2024 10:55

எந்த இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது அவன் அவன் வேலைய பாத்துட்டு போறான் உங்களுக்கு எரியுதுன்னா உனக்கு எரியுதுன்னு சொல்லிட்டு போ அத விட்டுட்டு இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது அப்படின்னு நீயா எதுக்கு இந்த மாதிரி பித்தலாட்டம் பண்ணிட்டு இருக்க ஜாதி இருந்தால்தான் பிஜேபி வாழும் இந்து மதத்தில் இருக்கிற உயர்ஜாதி அப்படின்னு சொல்லிக் கொள்ளுகிற திருட்டுப் பயல்கள் சுகமாக இருப்பார்கள் அதற்காகத்தான் இந்த எதிர்ப்பு ஆனா ஒன்னு உங்க எதிர்ப்பெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது தமிழ்நாட்டை பொறுத்தவரை நீங்கள் செல்லாக்காசு தான்


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 11:51

தன் சாதிதான் உயர்ந்தது என நினைப்பவர்கள்தான் ஆணவக் கொலை செய்கிறார்கள் வன்கொடுமையில் இறங்குகிறார்கள். அந்த லிஸ்டில் உங்கள் மனதில் உள்ள EWS சாதி இல்லை. அவர்கள் இதெல்லாம் செய்வதில்லை.


sridhar
ஜூன் 26, 2024 12:00

பெயர் தான் கேசவன், knowledge zero.- நீரில்லா நெற்றி பாழ் என்று ஹிந்துக்களின் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் - சந்துரு அட்வைஸ் ஹிந்துக்களுக்கு தேவை இல்லை - மதம் மாறி விட்டால் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டியது தானே , எதற்கு இந்த கள்ளத்தனம்


Mettai* Tamil
ஜூன் 26, 2024 12:37

1967 க்கு பிறகு வந்த திராவிட அரசியலால் தான் உங்களை போன்று எந்த ஹிந்துக்கள் என்று கேலியாக பேசுவது, குறிப்பிட்ட மதத்தை மட்டும் தரக்குறைவாக விமர்சிப்பது போன்ற நடக்கிறது. நீங்கள் சொல்லும் மைனாரிட்டி உயர் ஜாதியா, ஜாதி கலவரம், ஆணவ கொலை, கொள்ளை, ஊழல் ,ரவுடித்தனம் செய்றாங்க .சொல்லுங்க கேஸவா ...காமராஜரை செல்லாகாசாக்கிய ஊழல் வாதிகள் செல்லா காசாவது காலத்தின் கட்டாயம் .......


ram
ஜூன் 26, 2024 12:51

நீ எதுக்கு இவ்வளவு பொங்குற


ram
ஜூன் 26, 2024 12:54

இதுபோல வேற்று மதத்தை சேர்ந்தவன் கருத்தை இங்கு வெளியிட்டதற்கு கண்டனம். கேசவன் மதம் மாறிவிட்டால் அந்த மத பேரை வைத்து கருத்துக்கள் போடு அதைவிட்டு கோழைத்தனமாக ஹிந்து பேரில் ஒளிந்துகொண்டு வெட்கமாக இல்லையா. இதற்கு வேற வேலை செய்யலாம்.


Prasanna Krishnan R
ஜூன் 26, 2024 16:58

Read this loudly ???


prathab
ஜூன் 27, 2024 09:21

உன்னை போல பிறவிகள் இன்னும் இருக்கும் போது என்ன பண்ண முடியும்... அவன் சொல்லுறது என்ன நீ விளக்கம் கொடுக்குறது எதுக்கு...


தமிழ்வேள்
ஜூன் 26, 2024 10:39

செபாஸ்டியன் சந்துரு ஒரு கிரிப்டோ கிறிஸ்தவ கம்யூனிஸ்ட் நீதிபதி. அவருடைய தேசவிரோத இந்து விரோத நடவடிக்கைகளுக்காக கருணாநிதியால் தரப்பட்டது நீதிபதி பதவி .. அதற்குரிய கேவலமான விசுவாசத்தை அவர் காண்பித்துள்ளார் .. கிறிஸ்தவ இஸ்லாமிய பள்ளிகளை ஹிந்துக்கள் புறக்கணிப்பது நல்லது. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத சார்பை, ஹிந்து விரோத நடவடிக்கைகளை, அவர்கள் கைவிடாத வரையில், நாமும் புறக்கணிப்பது நல்லது தானே?


Anand
ஜூன் 26, 2024 10:32

மதமாரி கைக்கூலி போல் தெரிகிறது.


sridhar
ஜூன் 26, 2024 10:16

வேறு மதம் பற்றி இப்படி அரைவேக்காட்டு புரட்சி கருத்து சொல்லி இருந்தால் இந்நேரம் அவர் நடமாடவே முடியாது, என்ன செய்ய , ஹிந்துக்கள் சொரணை அவ்வளவு தான்.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 26, 2024 09:58

ஜனாதிபதி விளக்கம் கேட்டு அதற்கு பதில் சொன்னால் போதும். நீதிபதி நான் ஒரு சாபக்கேடு என புரிந்து கொள்ளுவார்


M Ramachandran
ஜூன் 26, 2024 09:16

எத்தனையோ அதில் ஒன்றைய்ய பற்றி கவலையேன்.


mindum vasantham
ஜூன் 26, 2024 09:11

அதிமுகவுக்கு அஜித் தலைமை போடுங்கள்


S. Narayanan
ஜூன் 26, 2024 09:10

பாவம் அப்பாவிகளை வைத்து விளையாடும் அரசியல் வாதிகளை தூக்கில் போட வேண்டும்


Srinivasan Krishnamoorthi
ஜூன் 26, 2024 10:33

சந்துரு எளியவர். ஆனால் அப்பாவி அல்ல. ஒருவேளை இந்த மாதிரி தான் அறிக்கை கொடுக்க வேண்டும் என அச்சுறுத்தல் இருக்கும். தரம் தாழ்ந்து விட்டார்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ