உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் வேதனையை தரும் : உயர் நீதிமன்றம் கருத்து

ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் வேதனையை தரும் : உயர் நீதிமன்றம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த சரவணன்,தன் தாய் அரசுப் பணியில் இருந்ததை மறைத்தும், சிறுவயதில் அவர் கைவிட்டு சென்றதாக கூறியும், 1989ல் கருணைப் பணி நியமனம் பெற்றதாக கூறப்படுகிறது.இதனால்,ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சரவணன் மனு செய்தார். மனுவை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார்.அரசு தரப்பு:மோசடியாக வேலை பெற்ற நபருக்கு ஆதரவாக பள்ளிக் கல்வித்துறை செயல்பட முடியாது.நீதிபதி: பணிக்காலத்தை நிறைவு செய்ய மனுதாரரை அனுமதித்த பின், வேலைவாய்ப்பு பெறுவதில் உண்மைகளை மறைத்து விட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.ஓய்வுபெறும் தேதியில் சஸ்பெண்ட் செய்தால் மன வேதனையை தரும். அதுபோல் வேறு எந்த மாதிரியான மன வேதனையும் இருக்க முடியாது. சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.அனைத்து பலன்களுடன் மனுதாரரை ஓய்வுபெறஅனுமதிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

PKSM
மே 22, 2024 22:04

அன்பர்களே, உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் இந்த சரவணன் தனக்கு திருமணம் முடிந்தவுடன் தனது பெற்றோரை தனிமையில் விட்டுவிட்டு மனைவியின் பேச்சைக்கேட்டு வந்தவன் இன்றும் அவனின் தாய் காளையார்கோவிலில் தனது தள்ளாத வயதில் பார்க்க ஆள் இல்லாமல் தனிமையாக வாழ்கிறார் ஆனால் இன்று தன் தாய் விட்டுச்சென்றதாக கூறி வழக்கு தொடுத்து இருக்கிறான் அடித்தாலும் பாவம் இல்லை இவன் எல்லாம் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராம் பெற்றோர்களை கடைசி காலத்தில் தனியாக தவிக்கவிட்ட யாரும் நன்றாக இருந்தது இல்லை


M S RAGHUNATHAN
மே 17, 2024 22:31

First mistake lies with the Department Whether pension family pension was paid and if so to whom What was the age of the beneficiary at the time of his appointment What was his age when his father died? Did the mother was under government employment when the compassionate appointment was made? Did the mother receive full family pension when she was in government service? The pension disbursing authorities are mandated to obtain annual declaration that the recipient of the pension of her employment or otherwise and declaration whether she got remarried குடும்பமே fraud போல இருக்கு


Subash BV
மே 17, 2024 18:35

Why thinking of punishing only accused Go into details, find who is the reason for the accused, who continued his service Take action on him and correct the tem accordingly OUR COURTS ACCUSTOMED TO GIVE BLIND JUSTICES AND WASTES PUBLIC MONEY


Raa
மே 17, 2024 14:00

எந்த தீர்ப்பு சரியாக படவில்லை பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்றோ செய்த தவறு இன்று கர்மவினையாக வருகிறது தவறு செய்தவர்கள், என்றோ ஒரு நாள் அனுபவித்துத்தான் தீரவேண்டும் கல்வித்துறை செய்தது சரியே


vijay
மே 17, 2024 12:02

அவர் செய்தது தவறுதான் தவறு பற்றி எப்போது தெரிந்ததோ, அப்போதே விசாரித்து தண்டனையும் கொடுத்து இருக்கணும் இந்த மாதிரி ஓய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது, ஓய்வு கொடுத்துவிட்டு பிறகு தண்டனைக்காக பணக்கொடை போன்றவற்றை நிறுத்திவைப்பது போன்று பல வருடங்களாக நடந்துவருகிறது தெரிந்தே ஒருவரை வேலையில் நீடிக்கவைத்தது அந்த அரசு துறையின் குற்றம் அதெப்பெடி, இந்த மாதிரியான தவறுகளுக்கு விசாரணை என்று பலவருடங்கள் நடத்தி பின்னர் ஓய்வு நாளன்று மட்டும்தான் சட்டம் நியாயம் என்று நினைவுக்கு வருகிறதா? எனது நண்பரின் அலுவலகத்தில் இப்படித்தான் ஒரு பெண் தான் SC என்று போலியான ஜாதி சான்றிதழை கொடுத்து வேளையில் சேர்ந்தார் வருடங்களுக்கு முன்னர் இன்னொருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடந்து நடந்து, அந்தம்மா தன்னுடைய கணவர் SC என்று வாதிட்டார் பிறகு கணவரும் OBC என்று தெரிந்தது அந்தம்மா கோர்ட்டுக்கும் போயி வாய்தா வாய்தா கொடுத்து இடைக்கால தடை எல்லாம் வாங்கி ஒரு மாத சம்பளம் கூட பாக்கி இல்லாமல் வாங்கிடுச்சு கடைசில ஓய்வு பெற்றுவிட்டது கிராஜுவிட்டி மட்டும் கொடுத்துவிட்டார்கள் ஓய்வு பெற்ற ஒரு வாரத்துக்கப்புறம் அலுவலகம் மும்முரமா செயல்பட்டு நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி அந்த பெண்ணை "டிஸ்மிஸ்" செய்தார்கள் டிஸ்மிஸ் செய்ததால் பென்சன், இதர பணிக்கொடைகள் மூன்று மாதங்களுக்கு தரவில்லை அந்த பெண் கோர்ட்டிற்கு சென்று வழக்கு போட்டு ஜெயித்தும் விட்டார் தவறு அரசு துறைகளின் மீதுதான், அது மத்திய அல்லது மாநிலமாக துறையாக யார் இருந்தாலும்


Natarajan Ramanathan
மே 17, 2024 11:57

இந்த மாதிரி கண்றாவிகளை முற்றிலும் ஒழிக்க ஒரே வழி கருணை ஆடிப்படையிலான நியமனங்களை அடியோடு ஒழிப்பதுதான் கருணை அடிப்படையில் வேலையில் சேரும் ஒருவர்கூட வேலையை ஒழுங்காக செய்வதே இல்லை மேலும் அவர்களே லஞ்சம் மிக அதிகமாக வாங்குகிறார்கள்


Rajasekar Jayaraman
மே 17, 2024 11:20

அப்போ ஒரு நிறுவனத்தை ஏமாற்றுவது குற்றவில்லையா அதற்கு என்னதான் தண்டனை பணப்பயனை நிறுத்துவது தான் ஒரே தண்டனை இல்லை வாழ்நாள் சிறை இரண்டில் எதுவோ அதை நிறைவேற்ற வேண்டும்.


குமரேஷ்
மே 17, 2024 11:08

பொய்சொல்லி, லஞ்சம்.குடுத்து வேலை வாங்கியாச்சு. இன்னிக்கி முதலைக்.கண்ணீர். இதுவரை வாங்குன சம்பளத்தை திருப்பி வாங்கினா, இனிமே வர்ரவன் பொய் சொல்லி வேலை வாங்க மாட்டான்.


தமிழ்வேள்
மே 17, 2024 10:21

லஞ்ச ஊழல், கிரிமினல் நடவடிக்கைகளை, சுருங்க சொன்னால் -திருட்டு திராவிட ஸ்டைல் வாழ்க்கை முறையை உச்ச நீதி மன்றம் விரும்புவது போல தெரிகிறது காங்கிரஸ் சகவாச தோஷம் வேலையை காட்டுகிறது


ديفيد رافائيل
மே 17, 2024 10:19

தெய்வம் நின்று கொல்லும் தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும் தாமாதமானாலும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை