உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு உண்டு

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு உண்டு

சென்னை:'ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நாளை அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு: அசையாச் சொத்துக்கள் குறித்த பத்திரப் பதிவுகளை, மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இதனால், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதை ஒட்டி, நாளை சனிக்கிழமை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும். காலை, 10:00 மணி முதல் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான கூடுதல் கட்டணத்தை சேர்த்து வசூலிக்க, சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை அளிக்க, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ