உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறில்லை: நடிகர் விஷால் பேட்டி

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறில்லை: நடிகர் விஷால் பேட்டி

கடலுார் : அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது, நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறில்லை என, நடிகர் விஷால் கூறினார்.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில், தனது ரசிகர் மன்ற நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மக்களின் ரசனைக்கு ஏற்றபடி இருந்தால் தான் படங்கள் வெற்றி பெறும். சினிமா துறைக்கு இந்த ஆண்டு கடினமான ஆண்டாக உள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. 10 பெரிய படங்கள் திரைக்கு வர உள்ளது. இதற்கான தியேட்டர்களை இப்போதே எடுத்து விட்டனர். இதற்கிடையில் சிறிய படங்கள் திரைக்கு எப்படி வருவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.தமிழகத்தில் நடக்கும் படுகொலைகள் கவலையை ஏற்படுத்துகிறது. அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் சினிமா துறையில் இருந்து கருத்துகள் வருகிறது.அரசு ஏன் சினிமா விவகாரத்திற்கு வருகிறது. அரசு தங்கள் துறையை கவனித்தால் போதும். நான் அரசியல் களத்திற்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் வேறு வழியில்லை. அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் தவறு இல்லை.இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ