வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கடைவீதியில் நகை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. ஒரு கிராம் நகை வாங்க மொத்த குடும்பமே வருகிறது.. காபி, பலகாரம் எல்லோருக்கும் உண்டு ....
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்களை மூளை சலவை செய்து மூட நம்பிக்கையை திணித்து பணம் பார்க்கும் நகை கடை காரர்கள் கொண்டாடும் நாள்.
வசதி உள்ளவர்கள் தெருவில் வசிக்கும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் நாள்தான் இன்று. தங்கம் வாங்கி நகை கடைக்காரனை மேலும் கோடீஸ்வரனாக்காதீர்கள். இன்றைய தினம் கோவிலுக்கு போகலாம் ஆனால் உண்டியலில் காசு போடாதீர்கள். அது ஆண்டவனுக்குச் சேருவதில்லை. தேவைப்படும் இரண்டு பேருக்காவது சாப்பாடு வாங்கித் தரலாம்.
அட்சிய திருதீயை என்பது வடநாட்டில் கொண்டாடப்படும ஒரு பண்டிகை இன்று இமாலயத்தின் மேல் உள்ள பதிர்நாத், கேதார்நாத் போன்ற திருத்தலங்களில் உள்ள கோவில்கள் குளிர் காலத்திற்குப் பிறகு இன்று தான் திறக்கப்படும் தீபாவளியன்று கடைசியாக பூஜை செய்து கோவில்களை பூட்டுவார்கள், பனிக் காலத்திற்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பார்கள் அதனால் மக்கள் யாத்திரை செல்ல தொடங்குவார்கள் அது போல சீக்கிர்யர்களும் யாத்திரை கிளம்புவார்கள் ஹெம்குண்டு சாஹிப் எனும் அழகிய பிரதேசம் ஹெமகுந்த் ஏரியின் மீது இமயமலையில் மீது அமைந்துள்ளது இது சீக்கியர்களின் புண்ணிய இடம் இங்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சீக்கியர்கள், இந்துக்கள் வந்து செல்வார்கள் இது பாண்டுகேஷ்வர் எனும் புண்ணிய க்ஷேத்திரம் அருகில் உள்ளது ஆக, புண்ணிய தீர்த்த யாத்திரை செல்லும் காலம் இது தவிர பனிக்காலம் முடிந்து அனைவரும் தங்களின் வேலைகளை தீவிரமாக தொடங்குவார்கள் வெளியில் வேலைவாய்ப்பு தேடிச் செல்வார்கள் தானம் கொடுப்பது சிறந்தது வெளியில் செல்பவர்கள் தானம் வழங்குவார்கள் ஆனால் இந்த அட்சய திருதீயை எனும் பண்டிகையை இதை வர்த்தகர்கள் தங்களுக்கு சாதகமாக திருப்பி விட்டுக் கொண்டனர் மக்களும் அதை அப்படியே பின் பற்றுகின்றனர் பணம் இருப்பவர்கள் எதையும் செய்யலாம்
அட அப்ரெசெண்டுகள, இன்னுமாடா ஏமாறுவீங்க
அட்சய திருதியை மக்களை ஏமாற்றி கொள்ளை லாபம் பார்க்கும் நகைக்கடை வியாபாரிகளின் தந்திரம் மக்கள் இதை நம்பாமல் புறக்கணிக்க வேண்டும் சில மாதங்களுக்கு யாரும் தங்கம் வாங்க நகைக்கடை பக்கம் போகக்கூடாது அப்போது தான் தங்கம் விலை குறையும்
இந்த 'தங்க த்ரிதியை' பித்தம் யாருக்கு வளர்ச்சி அளிக்கிறதோ இல்லையோ, நகை வியாபாரிகளுக்கு ஜாக் பாட் அடிக்கிறது சந்தடி சாக்கில் சின்ன ஐட்டங்களான தோடு , மூக்குத்தி போன்றவற்றில் காரட்டை 'நுழைந்துவிடும்' செயலும் நடக்கும் முன் காலத்தில், ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கூட இந்த தங்க பைத்தியம் இருக்கவில்லை அன்று செய்யும் தானங்களுக்குப் பல மடங்கு பலன் உண்டு என்றும் தர்ப்பணம் போன்ற வழிபாடுகளையும் தான் செய்து வந்தனர் மஹாலக்ஷ்மி கடல் மக்கள் ஆனதால் கடல் விளைச்சலான உப்பு வாங்குவோம் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்புக், பேனா வழங்கும் வழக்கம் உண்டு இன்று பாஞ்சாலிக்கு ஆடை வளர்த்த தினம் என்பதால் புத்தாடை உடுத்துவோம்
நள்ளிரவு வரையில் ஏமாற அரியதோர் வாய்ப்பு நகைக்கடை முதலாளிகளை கோடீஸ்வரர்கள் ஆக்க ஏமாளி மக்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம்
தீபாவளி போன்ற விஷேச நாட்களில் விடிய விடிய டாஸ்மாக் திறக்க சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் விடியல் அரசு
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago