உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்காசியில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து; பயணிகள் 6 பேர் பலி

தென்காசியில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து; பயணிகள் 6 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மேலும் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை