உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

சென்னை : சென்னை, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த சிவகுமார் மகன் பிரகாஷ், 20; கார் ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம், நண்பர்கள் மூவருடன், அக்கரை கடலில் குளித்துள்ளார். அப்போது பிரகாஷ், அலையில் சிக்கி, கடலில் மாயமானார்.பெருங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல், 24; காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று, கடை ஊழியர்களுடன், பாலவாக்கம் கடலில் குளித்தார்.அப்போது, சக்திவேல் அலையில் சிக்கி கடலில் மாயமானார். நீலாங்கரை போலீசார், மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் உதவியுடன், இருவரையும் தேடுகின்றனர்.திருப்பூரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 26; ஓ.எம்.ஆரில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று, நண்பர்களுடன் நீலாங்கரை கடலில் குளித்தார்.அப்போது, அலையில் சிக்கி உயிருக்கு போராடினார். மீனவர்கள் உதவியுடன், நீலாங்கரை போலீசார், சீனிவாசனை மீட்டனர். இதனால், சீனிவாசன் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை