ஒரே நாளில் 3,400 பள்ளம் மூடல்
தலைநகர் டில்லியில், மழைக்காலம் துவங்கும் முன், வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகர் முழுதும் சாலைகளில் ஏற்பட்டு இருந்த, 3,400 பள்ளங்கள் நேற்று ஒரே நாளில் சீரமைக்கப்பட்டன. தெற்கு டில்லி சித்தரஞ்சன் பூங்கா அருகே சாலையை சீரமைக்கும் பணியை, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆய்வு செய்தார்.