உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணியில் மதிமுக.,வுக்கு 1 , விடுதலை சிறுத்தைக்கு 2 சீட்

தி.மு.க., கூட்டணியில் மதிமுக.,வுக்கு 1 , விடுதலை சிறுத்தைக்கு 2 சீட்

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக.,வுக்கு ஒரு தொகுதியும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, அதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கூடுதல் இடம் கேட்டதால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று (மார்ச் 7) மதிமுக நிர்வாகக் குழு அவசரமாக கூடியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5qkqlkn2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, தொகுதி பங்கீடு பற்றி விவாதித்தனர். இந்த நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் வைகோ. அப்போது திமுக - மதிமுக இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது.அதன்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் மதிமுக.,வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ''மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு எந்த தொகுதி என்பது குறித்து முடிவெடுக்கப்படும். ராஜ்யசபா சீட் குறித்து இப்போதைக்கு எதுவும் பேசவில்லை. அதற்கு இன்னும் நாள் இருக்கின்றது; பேசவேண்டிய நேரத்தில் பேசுவோம்'' என்றார்.திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தனித்தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை