உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி உதவி! தொண்டர்களுக்கு இ.பி.எஸ். அட்வைஸ்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி உதவி! தொண்டர்களுக்கு இ.பி.எஸ். அட்வைஸ்

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.,வினரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வட தமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், மிக அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடக்கும்போது கழிவு நீர் குழாய் திறப்புகள் மூடியுள்ளனவா என்றும், மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்துள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 22:39

ஓஹோ, கவர்னர் அறிக்கை விட்ட பிறகு தான் அறிக்கை விட வேண்டும் என்று சொல்லிட்டாங்க போல. புயலுக்கு எண்டு கார்டு போட்டாச்சு, போய் தூங்குங்க. முதல்வரும், துணை முதல்வரும், அரசுத் துறைகளை சரியாக முடுக்கி விட்டு, கண்காணித்து, வழிகாட்டி, கூடவே நின்று பணியாற்றி வருகிறார்கள். இ பி எஸ் வீட்டில் இருந்து கொண்டு டி வி பார்த்து அறிக்கை விடறார்.


Anantharaman Srinivasan
நவ 30, 2024 20:19

EPS வீட்டிலிருந்தபடி Advice .. எதிர்கட்சித்தலைவராக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆறுதல் தரவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை