உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சோறு அ.தி.மு.க., -- பா.ஜ., கண்டனம்

 துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சோறு அ.தி.மு.க., -- பா.ஜ., கண்டனம்

சென்னை: கோவை செம்மொழி பூங்கா ஊழியர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு எடுத்து செல்லப்பட்டதற்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில், ' துாய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்' என்ற பெயரில், ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சியை, முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். சென்னையில் 60 சதவீதம் பேருக்கு கூட, உணவு வினியோகம் செய்யப்படவில்லை. பல மணி நேரம் உணவுக்காக, துாய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக, செய்திகள் வருகின்றன. இந்நிலையில், கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு எடுத்து செல்லப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. குப்பை வண்டியில் சாப்பாடு எடுத்து சென்று இழிவுபடுத்துவதற்கு, இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே, சுயமரியாதை உள்ள யாருக்கும் தோன்ற செய்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்த பின், அதே மக்களை இழிவுபடுத்துவதிலும், தி.மு.க.,வை விட வல்லவர்கள், இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலேயே யாரும் இல்லை. துாய்மைப் பணியாளர்களுக்கு, உணவு வழங்கும் திட்டத்தை, முறையாக அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: குப் பை அள்ளுபவர்களுக்கு, குப்பை வண்டியில் சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? கோவை காந்திபுரம் செம்மொழி பூங்காவில், பணிகளில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்களுக்கு, கழிவுகளை ஏற்றிச் செல்லும் குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த தி.மு.க., அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது; துளியும் மனிதா பிமானமற்ற செயல். கழிப்பறையில்கூட கொள்ளை அடிக்கும் தி.மு.க.,வினரை, ராஜ மரியாதையுடன் நடத்தும் தி.மு.க., அரசுக்கு, துாய்மை பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவு அளிப்பதில் என்ன சிக்கல்? எங்களுக்கு உணவளியுங்கள் என்று துாய்மை பணியாளர்கள் கேட்டனரா; 'சோறு போடுகிறோம்' என்ற போர்வையில், அவர்களின் சுய மரியாதையை சீண்டிப் பார்க்கிறீர்கள். விளிம்பு நிலை மக்கள் மீதான தி.மு.க.,வின் வெறுப்பு, இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போகும் என்று கனவில்கூட நினைக்கவில் லை. தி.மு.க., அரசின் அகம்பாவ போக்கை மக்கள் கவனிக்கின்றனர். வரும் தேர்தலில், வட்டியும் முதலுமாக வாங்கி கட்டிக்கொள்ள தயாராகுங்கள். இவ்வா று அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை