உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரமலான் நோன்பு துவக்கம்

ரமலான் நோன்பு துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ரமலான் நோன்பு நேற்று துவங்கியது.ஒவ்வொரு ஆண்டும், முஸ்லிம் நாள்காட்டியின் ஒன்பதாவது மாதம், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன், ஒரு மாதம் முஸ்லிம்கள் நோன்பிருப்பர். அதிகாலை சாப்பிட்ட பின், மாலை சூரியன் மறையும் வரை, எதையும் சாப்பிட மாட்டார்கள்; நீரும் அருந்த மாட்டார்கள். மாலை நோன்பு கஞ்சி குடித்து நோன்பை முடிப்பர்.பொதுவாக 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது, முஸ்லிம்கள் வழக்கம். பிறை பார்த்து நோன்பு கடைப்பிடித்தலை துவக்குவர்.நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்குவதாக, தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ