உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல் மழையில் வெளியில் வராதீங்க... இதை மறக்காமல் பாலோ செய்யுங்க!

புயல் மழையில் வெளியில் வராதீங்க... இதை மறக்காமல் பாலோ செய்யுங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புயல் கரையை கடக்கும்போது, மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. * புயல், மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை, இன்று வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது* புயல் கரையை கடக்கும்போது, இன்று பிற்பகல், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையில், பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.* புயல் கரையை கடக்கும்போது, கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர, இதர பணிகளுக்காக வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்த்து, பாதுகாப்புடன் வீடுகளில் இருப்பது அவசியம்* கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.* வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் வருவதை தடுக்க, பூங்கா மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy Sekar
நவ 30, 2024 07:20

அதெல்லாம் நம்ம மக்கள் இந்த விஷயத்தில் உஷாராகவே இருப்பார்கள். அவர்கள் வேண்டுதலின் புயலே திசைமாறிப்போய்விடக்கூடும். வாக்களிப்பதில் தான் சுதப்புவார்களே தவிர இதுஇப்போன்ற விஷயங்களில் ரொம்போ உஷாரானவர்கள். மேம்பாலத்தை கார் நிறுத்துமிடமாக தேர்வு செய்யும்போதே தெரியலையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை