மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளி சாவு : போலீசார் விசாரணை
22-Jan-2025
நாமக்கல்: திருச்சி மாவட்டம், தொட்டியம் கிடாரம் காட்டு சாலையை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன், 51, லாரி டிரைவர். இவரது மகள் ஸ்ரீநிதி, 19; கோவை கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வந்தார். மகன் ஸ்ரீகார்த்திகேயன், 16, மோகனுார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.இந்நிலையில், சிவசுப்ரமணியன், தன் மகள், மகனுடன், பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு 'ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கில், மூவரும் ஹெல்மெட் அணியாமல், ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மோகனுார், கீழ்பாலப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சரவணன், 51. இவர், தேவக்கோட்டையில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு, 12:45 மணிக்கு, மோகனுார் - ப.வேலுார் சாலையில், துாக்கக் கலக்கத்தில் வந்தார். எதிர்பாராத விதமாக, பைக் மீது லாரி மோதியது. இதில், சிவசுப்ரமணியன், மகள் ஸ்ரீநிதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஸ்ரீகார்த்திகேயன், லாரி டிரைவர் சரவணன் ஆகியோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
22-Jan-2025