உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்தி ஒளிபரப்பை தடுக்க மின் தடை ஏற்படுத்த திட்டமா? பா.ஜ. தலைவர்கள் கண்டனம்

அயோத்தி ஒளிபரப்பை தடுக்க மின் தடை ஏற்படுத்த திட்டமா? பா.ஜ. தலைவர்கள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாடே விழாக்கோலம் பூண்ட நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில், கும்பாபிஷேக நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய போலீசார் தடை விதித்ததும், சில கோவில்களில் சிறப்பு பூஜைக்கு அனுமதி அளிக்காததும், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, நேரடி ஒளிபரப்பை காண, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ராமர் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. தனியார் நடத்தும் கோவில்களில், நிகழ்ச்சி நடத்தவும், போலீசார் தடை விதித்துள்ளனர்; பந்தல்களை பிரித்துள்ளனர். நிகழ்ச்சி நடத்துவோர் மிரட்டப்பட்டுள்ளனர். தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்.இதயத்தை நொறுங்க செய்யும் நிகழ்வுகள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. பஜனை, அன்னதானம், இனிப்பு வழங்குதல் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்தவர்கள் மிரட்டப்படுகின்றனர். பிரதமர் மோடி பங்கேற்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரத்தில், நேரடி ஒளிபரப்பை தடை செய்ய, மின்தடை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.இது, இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க.,வின் ஹிந்து விரோத நடவடிக்கை. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, தமிழக அரசு நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. இது தவறான மற்றும் போலியான கதை. தமிழக பா.ஜ. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: திண்டுக்கல் மாவட்டம், ஏ வெள்ளோடு கிராமத்தில், ஸ்ரீபகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், ஸ்ரீராமர் கோவில் விழாவையொட்டி, அன்னதானம் வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ''அதிக கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர். கிறிஸ்துவ தேவாலயங்கள் அமைந்து உள்ளன. குறைந்த அளவிலேயே ஹிந்துக்கள் உள்ளதால், மேற்படி நிகழ்ச்சி நடத்தும்பட்சத்தில், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம்.''பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு, அதன் வழியே சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனுமதி மறுக்கப்படுகிறது” என்று அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.ஏதாவது ஒரு காரணம் கூறி அனுமதி மறுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படி, மனம் போன போக்கில் இப்படி செயல்படுகின்றனர்.”தமிழகத்தில் அதிக ஹிந்துக்கள் வசிக்கின்றனர்; அதிக கோவில்கள் அமைந்துள்ளன. குறைந்த அளவிலே கிறிஸ்துவர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் சார்ந்த நிகழ்ச்சி நடக்கும்பட்சத்தில், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால், இனி தமிழகத்தில் கிறிஸ்துவ மக்கள் எந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை” என காவல்துறை சொல்லுமா? நிர்வாக சீர்கேட்டின் உச்சத்தில் தமிழக அரசு நின்று கொண்டிருக்கிறது என்பதற்கு, இதை விட சான்று வேண்டுமா.* தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: நவ திருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரை திவ்யதேசத்தில், இன்று ராமர் பஜனை மற்றும் பூஜை நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு, மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு. அதை தமிழக காவல்துறை மீறுகிறது. சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை. அதை காரணம் காட்டி, மக்களை கூட விடாமல் தடுப்பது, காவல் துறையின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

பேசும் தமிழன்
ஜன 22, 2024 19:07

ஏற்கெனவே ஒருவர்... மத்திய உள்துறை அமைச்சர் வந்த போது... மின்தடை ஏற்படுத்தி... இப்போது படாத பாடு படுகிறார்... மறுபடியும் மின்தடை ஏற்படுத்தினால்.... இந்த முறை உள்ளே போவது யாரோ ???


Saravanan
ஜன 22, 2024 17:33

ஸ்டாலின் என்கிற அவுரன்கஸிப் இப்படி தான் ஆட்சி செய்வார்


raja
ஜன 22, 2024 12:33

பிச்சை போட்டவர்களை சந்தோச படுத்துவது தான் பிச்சைகாரணின் தையாய கடமை...


Bala
ஜன 22, 2024 10:56

In my earlier comment, had stated that these guys fear courts and elections only. Now, the Hon'ble court has permitted screening of the prana pradhistha in non-HRCE temples and mantapams. So, first slap on their face. The next slap on these characters should be given thru the elections. True seculars let's all unite. Let's also respect and appreciate the sentiments of friends from other religions - except those trying forcible conversions. Jai Shree Ram


venugopal s
ஜன 22, 2024 10:44

தமிழக அரசுக்கு எதிராக யார் என்ன புரளியைக் கிளப்பினாலும் நம்புவதற்கு சுயசிந்தனை இல்லாத ஒரு கூட்டம் தயாராக உள்ளது!


sankar
ஜன 22, 2024 12:09

சொம்படிக்க உன் போன்ற முரோசொலி வாசகன் இருக்கிறானே


Sudarsanr
ஜன 22, 2024 12:55

அப்போ கோர்ட் சொன்னது பொய்யா கோப்பால்...


venkat
ஜன 22, 2024 14:51

சொந்த அனுபவம் - இன்று சரியாக காலை 11.30 மணிக்கு SCV கேபிள் சிக்னல் சுட் செய்தார்கள் - அயோத்தி நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் 1.10 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பு துவங்கியது. இந்த தீய முக ஹிந்து எதிர்ப்பு ஆட்சி எவ்வளவு தூரம் போவார்கள் என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு. விநாச காலே விபரீத புத்தி என்பது இவர்களுக்கு காலம் உணர்த்தும். நாங்கள் U டியூபில் பார்த்தோம்.


பேசும் தமிழன்
ஜன 22, 2024 19:08

உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது.... வெளியே வந்தே தீரும்.... உங்கள் கொட்டம் அடங்கும்.... அடக்கப்படும்.


Bala
ஜன 22, 2024 10:07

இன்று ஒளிபரப்பை தடை செய்து சிறுபான்மையில் ஒரு சாராரை திருப்தி படுத்துவார்கள். இரண்டு நாள் பிறகு, "அயோத்தி செல்லும் தமிழர்களுக்கு எல்லா வசதிகளையும் முதல்வர் அறிவுறுத்தலின் படி இந்து அறநிலையத் துறை செய்து கொடுக்கும்" என்று சேகர் பாபு அறிக்கை விடுவார். இது ஜாதி ரீதியாக இந்துக்களை திருப்தி படுத்த. ஊரை ஏமாற்றும் இரட்டை வேடதாரிகள். யார் தந்தையார் இல்லத்து பணம்


rasaa
ஜன 22, 2024 10:03

திருட்டு மு.கவை தேர்தலில் ஒழித்துக்கட்ட வேண்டும்


Bala
ஜன 22, 2024 09:52

Though the DMK won overwhelmingly in 2019 parliament elections & NDA lost very badly in TN, the overall record shattering win at all-India level by the NDA sent shivers to DMK. The result - the top leadership started talking that "we are also Hindus & our family members go to temple and worship". They also started carrying Murugar Vel to appease Hindu votes. So, these guys should be taught a lesson in the elections. They fear courts and elections only. A hard slap on their face in the elections is the only way to mend them. Else, their arrogance and minority appeasement will continue.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 22, 2024 09:43

ஒரு அரசியல் கட்சி இந்துக்களின் உணர்வினை தவறாக பயன்படுத்த துடிக்கிறது.


sankar
ஜன 22, 2024 12:11

சிறுபான்மை வாக்குகளுக்காக பெரும்பான்மை மத உணர்வுகள் புண்படுத்தப்படும்போது இது நடக்கவே செய்யும்


Barakat Ali
ஜன 22, 2024 12:52

இன்னொரு கட்சி தமிழகத்தில் அதை வெற்றிகரமாக .....


T.sthivinayagam
ஜன 22, 2024 08:17

தடை இல்லை என்று அரசு கூறிவிட்டது ராமர் கும்பாபிஷெகம் நடக்கும் நல்ல நாளில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்


sankar
ஜன 22, 2024 09:25

ஆனால் உண்மை அப்படி இல்லையே தம்பி - மைனாரிட்டி வாக்குகள் வேறுபக்கம் இவர்களை திருப்புகிறதே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை