உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேட்டட் கம்யூனிட்டி திட்டங்களில் சாலை துண்டிப்பு கூடாது என உத்தரவு

கேட்டட் கம்யூனிட்டி திட்டங்களில் சாலை துண்டிப்பு கூடாது என உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கேட்டட் கம்யூனிட்டி' எனப்படும், தொகுப்பு குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, அப்பகுதியில் சாலை இணைப்பை துண்டிக்க கூடாது என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் தனியாக நிலம் வாங்கி, அதில் வீடு கட்டுவது குறைந்து அடுக்குமாடி திட்டங்கள், தொகுப்பு குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவது வெகுவாக அதிகரித்துள்ளது.இதற்காக, 5 ஏக்கர், 10 ஏக்கர் என அதிக பரப்பளவுள்ள நிலங்கள் வாங்கப்படுகின்றன. இந்த நிலங்களில் செயல்படுத்தப்படும் குடியிருப்பு திட்டங்களில், அனைத்து பக்கமும் சுற்றுசுவர் கட்டப்படுகிறது.அக்கம் பக்கத்தாரின் தொல்லைகள் எதுவும் இல்லாத தனித்த பகுதிகளாக இந்த குடியிருப்பு வளாகங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால், உள்ளூர் மக்கள் தொல்லை இன்றி, மக்கள் இங்கு வசிக்கலாம் என்று கூறப்படுகிறது.இவ்வாறு கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களால், உள்ளூர் அளவில் சாலைகளின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்து உள்ள உத்தரவு:கேட்டட் கம்யூனிட்டி என்ற பெயரில், வீடுகள், மனைகள் அடங்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, உள்ளூர் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. இதனால், அக்கம் பக்கத்து மக்கள் பிரதான சாலைக்கு செல்வதற்கான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.எனவே, பொது கட்டட விதிகளின் அடிப்படையில், பெரிய கட்டுமான திட்டங் களை செயல்படுத்தும் போது, சாலை இணைப்புகளை துண்டிக்க கூடாது.இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது, அக்கம் பக்கத்து பகுதிகளை இணைக்கும் சாலைகள் குறுக்கிட்டால் அதற்கான இடத்தை உரிய முறையில் ஒதுக்க வேண்டும். திட்ட அனுமதி வழங்கும் நிலையில், இதை துல்லியமாக கவனிக்க வேண்டும்.மக்கள் பயன்படுத்தும் சாலைகளின் இணைப்புகளை துண்டிக்கும் வகையில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த, மாவட்ட அலுவலர்களுக்கு நகர், ஊரமைப்பு துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

NATARAAJAN RAMASAMY
செப் 13, 2024 22:53

விவசாய நிலங்களில் பயிர் செய்ய விடாமல் அருகில் உள்ள கேட்டட் கம்யூனிட்டி என்கிற அமைப்பு விவசாயத்தை செய்ய விடாமல் விவசாயிகளை மிரட்டி கொண்டுள்ளது இது தவறான செயல் என தமிழக அரசும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என விவசாயிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்


NATARAAJAN RAMASAMY
செப் 13, 2024 22:50

அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கான சாலைகளை துண்டித்து கேட்டட் கம்யூனிட்டி அமைப்பது எந்த விதத்தில் நியாயம் குடியிருப்பு அமைவதற்கு விவசாய பணி நடைபெறுவதை தடுப்பது எவ்விதத்தில் நியாயம் விவசாய நிலங்களை வாங்குவதற்காக விவசாயிகளை மிரட்டி அவர்கள் பணி செய்ய விடாமல் விவசாயம் செய்ய விடாமல் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ