உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4வது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை

4வது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து 4வது நாளாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, பில்லூர் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில், பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, அணை நிரம்பியதாக அறிவித்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த, 16ம் தேதி பில்லூர் அணை நிரம்பியது. தொடர்ந்து அணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து, 15 ஆயிரம் அடிக்கு குறையாமல் வந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பில்லூர் அணை நிரம்பி உள்ளதால், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான, அவலாஞ்சியில், 216 மி.மீ., மழையும், அப்பர் பவானியில், 120 மி.மீ., குந்தாவில், 42 மி.மீ., பரளியில் 11 மி.மீ., பில்லூர் அணையில், 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 14 ஆயிரத்து 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் நான்காவது நாளாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. மேலும் பவானி ஆற்றிலும் நான்காவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venkatesan Srinivasan
ஜூலை 19, 2024 14:45

கர்னாடக மாநிலத்தோடு காவிரி குறித்து சர்ச்சை. பில்லூர் அணை நிரம்பி பவானி ஆறு வாயிலாக காவிரியில் கலக்கிறது. தற்போது காவிரி நீர் கடலில் கலந்தால் தமிழ்நாட்டின் நிலைப்பாடு முரண்பட்டது.


வல்லவன்
ஜூலை 19, 2024 14:05

100 அடியில் 55 அடி சேற்று மண் என்று தகவல்


P Karthikeyan
ஜூலை 19, 2024 11:25

அணைகளில் மட்டுமல்ல ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் மண்டையில் மனங்களில் வண்டல் தான் அதிகம் சேர்ந்துள்ளது. சோழன் மற்றும் காமராஜர் காலத்திற்கு பிறகு திராவிட கட்சிகள் கட்டிய அணைகள் ஏதுமில்லை .


sundarsvpr
ஜூலை 19, 2024 11:15

காவேரியை மட்டும் எதிர்பார்த்து தமிழ்நாடு இருக்கக்கூடாது. தேவையான நீரை இயற்கை வழங்குகிறது. தண்ணீரை கடலில் கலக்காமல் குளம் கண்மாய் ஏரி ஆணை இவைகளில் சேமிக்கவைக்க திராவிட கட்சிகள் அரசு எதுவும் செய்யவில்லை. அரசு செய்யவில்லை என்பதால் நாம் என்ன செய்தோம். கிணறுகளை மூடினோம். மாடி கட்டடங்களை கட்டினோம். கிணறுகளை கட்டவில்லை. மூன்று அடுக்கு என்றால் ஒரு கிணறு என்ற வகையில் கிணறுகளை கட்டவேண்டும். நம்மை நாம் காத்துக்கொள்ளாவிட்டால் யார் காப்பாற்றுவார்?


Raa
ஜூலை 19, 2024 10:40

தமிழ்நாட்டில் அணைகள் நிரம்பி வழிந்தால், ஆகா, ஓகோ என்று சந்தோசப்படவேண்டாம், முக்கால்வாசியை அணையில் முக்கால்வாசி கொள்ளளவு வண்டல் மண், களி மணல்தான் உள்ளது. மீதி கால் பங்கு இருக்கும் தொட்டி நிரம்பி வழிகிறது அவ்வளவுதான்.


ديفيد رافائيل
ஜூலை 19, 2024 11:10

உண்மை தான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி