உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் துறை அலுவலர்கள் ஸ்டிரைக்

வருவாய் துறை அலுவலர்கள் ஸ்டிரைக்

சென்னை,:தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் வருவாய் துறை உதவியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, சங்க தலைவர் எம்.பி. முருகையன், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வருவாய் துறை அலுவலர்களின் வாழ்வாதாரத்துக்கான ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் 48 மணி நேரம் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இதில், தமிழகம் முழுதும், 10,920 பேர் பங்கேற்றுள்ளனர். தற்போது நடந்து வரும், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்' வருவாய் துறை அலுவலர்களுக்கு, வேலைப் பளு மற்றும் பணி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண, 45 நாட்கள் அவகாசம் இருந்தும், 20 நாட்களில் நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். இதனால், பணியின் தரம் பாதிக்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண, 75 நாட்கள் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். எங்களை கடும் நெருக்கடி, மன அழுத்தத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
செப் 04, 2025 07:39

மனுக்கள் மீது தீர்வு காண முப்பது நாட்கள் என இருந்தது 21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் 75 நாட்களாக நிர்ணயித்துள்ளது என்பது லஞ்சத்திற்கு பேரம் பேச வசதியானதாகும்.அரசு ஊழியர்கள் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என மக்களை கொடுமை படுத்துவதால் தான் அரசு அவ்வப்போது திட்டங்களை தீட்டி செயல்படுத்த ஏற்பாடு செய்கிறது.அதற்கு மூடு விழா நடத்தும் விதத்தில் குற்றவாளிகள் ஒற்றுமையுடன் வேலை நிறுத்தம் செய்வதை தடுக்க வேண்டும்.


முக்கிய வீடியோ