மேலும் செய்திகள்
ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்
1 hour(s) ago
ரியல் எஸ்டேட் அதிபர் துாக்கிட்டு தற்கொலை
2 hour(s) ago
மன்னார்குடி : கூத்தாநல்லூர் அடுத்த வடபாதிமங்கலம் உச்சிவாடி கிராமத்தில், ஆடு, மாடு, கோழி வளர்த்து வரும் விவசாயி குடும்பத்தில், நாட்டுக்கோழி ஒன்று, சூரியன் உதிப்பது போன்று உருவம் உடைய முட்டை இட்டதை, அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் உச்சிவாடி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சண்முகம், 38. இவரது மனைவி சாந்தி. இவர்கள் வீட்டில் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில், தான் வளர்த்து வரும் நாட்டுக்கோழி வழக்கம் போல், காலை 6 மணிக்கு முட்டையிடாமல் 11 மணியளவில் முட்டையிடுவதை கண்டு, முட்டையை கையில் எடுத்து சாந்தி பார்த்தார். அப்போது, முட்டையில் சூரியன் முத்திரை பதித்தது போன்று நீள வட்டத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று, தனது கணவர் சண்முகத்திடம் தெரிவித்தார். இது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் சண்முகம் தெரிவித்தார். இச்செய்தி காட்டுத்'தீ' போன்று பரவி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கோட்டூர், கூத்தாநல்லூர் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் வந்து, இந்த அதிசய முட்டையை பார்த்த வண்ணம் உள்ளனர்.
1 hour(s) ago
2 hour(s) ago