| ADDED : நவ 26, 2025 12:22 AM
சென்னை: பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் மிக உயரிய விருதான வெள்ளி யானை விருது, இன்று தமிழகத்துக்கு வழங்கப்பட உள்ளது. பாரத சாரண - சாரணியர் இயக்கமான, 'ஸ்கவுட்ஸ்' வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு, வெள்ளி யானை விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை, தமிழக அரசு, 39 கோடி ரூபாய் செலவில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கடந்த ஜன., 28 முதல் பிப்., 3 வரை நடத்தியது. அந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியதற்காக, பாரத சாரண - சாரணியர் இயக்கம், அதன் உயர்ந்த விருதான வெள்ளி யானை விருதை, இன்று உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடக்கும் விழாவில், தமிழகத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. விழாவில், தமிழக சாரண - சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான மகேஷ், விருதை பெற உள்ளார். அவருடன், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், வெள்ளி நட்சத்திர விருது பெற உள்ளார்.