உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாவிக் குதிக்குது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்தை தாண்டியது

தாவிக் குதிக்குது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்தை தாண்டியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கும், ஒரு கிராம் ரூ.6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில தினங்களாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கும், ஒரு கிராம் ரூ.6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,750 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருப்பது, சாதாரண மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை. மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது. ஒரு பவுன் தங்கம் விரைவில் ரூ. 50 ஆயிரத்தை தாண்டும்' என நகைக்கடை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி விலை எவ்வளவு?

வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.20 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை