உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை!

இது உங்கள் இடம்: சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்

எச்.ஆப்ரகாம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவதில், பழம் தின்று கொட்டையை வெளியே துப்பிவிட்டு, தில்லாக நடமாடி கொண்டிருப்பவர்கள் மீது, 'அந்த பைல் ரெடி, இந்த பைல் ரெடி, இதோ காட்றேன் பார்' என்றெல்லாம் சொன்னார் ஒருவர்.ஆனானப்பட்ட, '2ஜி' வழக்கு விசாரணையின் போதே, டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு, தண்ணீர் காட்டி, போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலையாகி வெளியே வந்திருப்பவர்கள் அவர்கள்.சற்று திரும்பிப் பார்ப்போமா?கருணாநிதி ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் மீது பல்வேறு வகையான ஊழல் புகார்களை சுமத்தி, அவற்றை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.கவர்னர் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்பை, அப்படியே கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்.இந்த நாட்டு சட்ட-திட்டங்களில் உள்ள மாபெரும் கோளாறே இதுதான். யார்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே குற்றம் சாட்டப்பட்டவருக்கே அனுப்பி விளக்கம் கேட்கும் பழக்கம்... தமாஷாக இருக்கிறது!அது குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி பின் வருமாறு பதில் அளித்தார், 'பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்!' என்று!அன்று எம்.ஜி.ஆர்., கருணாநிதி மீது சுமத்திய ஊழல் புகார் குற்றச்சாட்டுகளால், கருணாநிதியை, ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை. தண்டனையும் வாங்கித் தர முடியவில்லை.ஏனெனில், நம் நாட்டு சட்டங்கள் அப்படி!அவை சாமானியர்களுக்கு சவுக்காகவும், அரசியல்வாதிகளுக்கு மாலையாகவும் தான் பெரும்பாலும் உள்ளன.அதுபோல, ஏறக்குறைய ஆறு மாதங்களாக அண்ணாமலை, தி.மு.க., பைல்ஸ், பாகம் 1, பாகம் 2 என வெளியிட்டபடி இருந்தார். ஏதாவது நடந்ததா? ஒன்றும் நடக்கவில்லை!குற்றம் சாட்டப்பட்டவரோ, 'இந்தியா என்று ஒரு நாடே கிடையாது. ராமன் எங்களுக்கு விரோதி தான்' என்று கதைத்து கொண்டிருக்கிறார்.இவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திட்டங்களால் கூட முடியவில்லை; அண்ணாமலை எம்மாத்திரம்?சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை... போரடிக்கிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Bala
மார் 15, 2024 21:18

திரு ஆபிரகாம் சொல்வது முற்றிலும் சரி. திரு அண்ணாமலை அவர்கள் DMK FILES குற்றச்சாட்டுகளை ஒரு தீர்க்கமான முடிவுக்கு கொண்டுவர தன்னுடைய IPS அனுபவத்தை பயன்படுத்தி செயல்படவேண்டும் என்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்


Mohan
மார் 15, 2024 16:41

பொய் சொல்பவர்களைத் தான் தமிழ்நாட்டு மகாஜனங்கள் நம்புவார்கள்.அவர்கள் தரும் காசுக்காகவும் விலையில்லா பொருள்களைப் பெற்றுவிட்டதற்காகவும் மனசாட்சியின் உறுத்தலின்றி இருக்க திராவிஷ விடியல்கட்சிக்கே ஓட்டுப் போடுவார்கள். இதிலொன்றும் சந்தேகமில்லை. பொன்முடி விஷயத்தில் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்தால் தான் மறுபடி பதவி வரும். ஏனென்றால் தீர்ப்பு மாறலாம். நீதிமன்றம் தண்டனையை நிறுத்தினால் எப்படி பதவி திரும்ப வரும்? CAA சட்டத்தை அமல் படுத்தும் முழு அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. மாநில அரசு எந்த ஆணியையும் பிடுங்க இயலாது. எந்த ஒரு முன் உதாரணமோ, சட்டத்தினால் மக்களுக்கு துன்பம் உண்டான.நிகழ்வோ எதுவும் இல்லாதபோது எதன் அடிப்படையில் எதிர்க்கலாம் என தெரியாமலேயே சும்மா எதிர்க்க இது ""என்ன நாட்டாமை தீர்ப்பை மாத்து"" என்பது போலவா??? சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகள் திமுக வில் மிக மிக அதிகம்


samvijayv
மார் 15, 2024 14:55

இன்றும் 2G வழக்கில் சிக்கியவர்களுக்கு இன்றுவரை விடுதலை ஆனா ஏதுனும் செய்திகளை எங்கும் பார்த்தது இல்லை சரி அது போகட்டும் மற்றோன்று இன்று இவர்கள் யாராவது வெளிநாட்டிற்கு செல்லவேண்டுமெனில் திரு.சுப்ரமணிசுவாமி அவரிடம் கையேத்து வாங்கிய பின் தான் செல்லவே முடியும் எதையாவது ஒன்று ஒளறிக்கொண்டு எழுதுவதும் சற்று தெரிந்துக் கொண்டு வாரும்.


Ramesh
மார் 15, 2024 13:54

ஏசுவின் குழந்தை ஆபிரகாம் வேறு என்ன சொல்ல முடியும்?


Srinivasan Ramabhadran
மார் 15, 2024 13:15

திரு பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அவரின் வழக்கு இறுதி தீர்ப்பு வரும் போது அவர் மீதான குற்றம் நிருபிக்கப் படாவிட்டால் அவருக்கு பெரும் தீங்கு இழைத்தது ஆக இருக்கும் என்று கூறி உள்ளனர். ஆனால், எத்தனையோ நபர்கள் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடுகின்றனர். பின்னர், வழக்கில் இருந்து குற்றம் நிரூபிக்க படாமல் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை பெறுகின்றனர். இதற்குள் பல ஆண்டுகள் கடந்து விடுகின்றன. அவர்களின் வாழ்க்கையின் பல ஆண்டுகள் குற்றம் சுமத்தப்பட்ட வராக கடந்து விடுகிறது. இப்படிப் பட்ட சாமானியர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்.


Paraman
மார் 15, 2024 12:24

இந்த கடிதம் இந்நாட்டின் மீது பற்று வைத்திருக்கும் உண்மையான இந்திய குடிமக்களின் குமுறல் ......404. உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் பிஜேபி/மோடி இன்னும் தீவிரமாக இந்த ஊழல்வாதிகளை வேட்டையாடிருக்க வேண்டும்/முடியும் ...அதை விடுத்து சும்மா ED. IT. NIA.விட்டு இன்னோவா எடுத்து கொண்டு குறுக்கும் நெடுக்கும் ஓடிவிட்டு இதன்னை கோடி பிடித்தோம் அத்தனை கோடி பிடித்தோம் என்று அளந்து விட்டு இது வரை ஒருவரை கூட தண்டனை வாங்கி தரமுடியாத கையாலாகாததனம் நம்பிக்கையின்மையை கொடுக்கிறது, மக்களின் கோபத்திற்கு ஆளாகும் படி செய்கிறது ....இன்றைய இந்திய சமுதாயம் முட்டாள்கள் அல்ல (தமிழகத்தில் இருக்கும் டுமீளன் கும்பல்களை தவிர) ...நீங்கள் சொல்லும் கதைகளை ஒரு அளவிற்கு மேல் யாரும் நம்ப தயாரில்லை ...இதே 404.உறுப்பினர்கள் இந்தியா கும்பல்களிடம், 21.ம் பக்க திராவிடியா பயல்களிடம் இருந்திருந்தால் உங்களை பொய் கேசு போட்டு உங்கள் 9.துவாரங்களில் விட்டு குடைந்து கழுவில் ஏற்றி இருந்திருப்பார்கள் அந்த வீரியம் உங்களுக்கு இல்லையா ....சும்மா அரசியல் பேரங்களுக்காக இந்த பூச்சாண்டி காட்டும் அறிவற்ற செயலை நிறுத்துங்கள் ம்மூன்றாவது முறையும் நீங்கள் வந்தாலும் எதுவும் பெரிதாக நடந்து விடும் ....21.ம் பக்க திராவிடியா பயல்கள் போன்ற கேடுகெட்ட ஊழல் கூட்டங்களின் கொட்டம் ஒடுக்கப்படும் என்று நம்ப தயாரில்லை


g.s,rajan
மார் 15, 2024 11:58

இந்தப் பூச்சி கடிக்குமா ..???


suresh
மார் 15, 2024 12:25

அண்ணாமலை என்ற பூச்சி ,ஜி எஸ் ராஜன் என்ற பாம்பை கடிக்காது . கவலை விடுக


g.s,rajan
மார் 15, 2024 11:40

பூச்சி காட்டல .பூச்சாண்டி காட்டறாரு ....


Nagarajan D
மார் 15, 2024 11:29

நண்பர் ஆபிரகாம் கூறிய கருத்துகள் 100% உண்மையானது... நமது நீதித்துறை வலுவில்லாததால் இத்தனை வாய்தா தீர்ப்பு நிறுத்திவைத்து ஜாமீன். ஒருவர் குற்றம் செய்திருந்தால் எதற்க்காக வாய்ப்பு தரப்படுகிறது? வாய்தாவால் வக்கீல்கள் வாழ்கிறார்கள் மக்களுக்கு தீமையே அதிகம்... நமது கோர்ட்டுகளில் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறோம்... எப்படியும் 10 வருடம் இழுத்து முறையீடு மேல் முறையீடு வாய்தா, தீர்ப்பு ஒத்திவைப்பு தீர்ப்பு நிறுத்திவைத்து முறையீட்டில் ஜாமீன், என்று அந்த கேசு முடிவதற்குள் எதற்க்காக வழக்கு தொடர்ந்தோம் என்று மறந்தே விடும்....


g.s,rajan
மார் 15, 2024 11:27

நமது நாட்டில் தி.மு.க கட்சி சரி இல்லை பொய்ப் பித்தலாட்டம் செய்வது, ஊரை ஏமாற்றுவது எல்லாம் ஊர் அறிந்த ஒன்று, ஆனால் அதே தவறை பி.ஜே.பி செய்யக்கூடாது என்பதைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


suresh
மார் 15, 2024 12:15

ஏனிந்த மன மாற்றம் திடீர் என்று? சொன்ன படி பேசிய கூலி வரவில்லையா? இல்லை நல்லறிவு வந்து உண்மை தமிழக நிலவரம் தெரிந்து விட்டதா ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை