உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சாவூரில் சோகம்; அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு

தஞ்சாவூரில் சோகம்; அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே முன் விரோதம் காரணமாக, மூன்று மாதத்திற்கு முன் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, பள்ளி நிர்வாகம் தலையிட்டு, இரு தரப்பினரிடையே பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தியது.தொடர்ந்து, டிச., 3ம் தேதி, மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி கழிப்பறையில், மீண்டும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிளஸ் 1 மாணவர்கள், 14க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம், பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதி வழியாக வந்த, பிளஸ் 2 மாணவரை கட்டையால் தாக்கினர்.இதில், பிளஸ் 2 மாணவருக்கு மண்டை உடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த மாணவரின் பெற்றோர், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் 15 மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இன்று (டிச.,06) சிகிச்சையில் இருந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மாணவரின் பெற்றோர், உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்