உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் என்னென்ன திட்டங்கள்? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் என்னென்ன திட்டங்கள்? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: வீணாக கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் திட்டம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் வகையில் சென்னையில் உள்ள ஏரிகளைச் சீரமைக்கக் கோரி ஜெகன்நாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு விசாரணை நடத்தியது.அப்போது நீதிபதிகள், ‛‛ சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் வீணாகும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விட்டு ஏன் பாதுகாக்கக்கூடாது? '' என கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், நீர்வளத்துக்கு என தனித்துறை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், உபரி நீரை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.இதனையடுத்து, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பருவமழை காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும். அது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மழைநீரை ஏரி குளங்களுக்கு திருப்பி விடுவதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நீர்வளத்துறை உருவாக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரம் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Jebamani Mohanraj
ஜூலை 31, 2024 09:01

ரிட் மனு 29770/2019 மழை நீர்வடிகால்கால்வாய் வேண்டாம், மழை நீர் சேகரிப்பு வேண்டும் என்ற கோரிக்கை மனு நிலுவையில்


Sivagiri
ஜூலை 30, 2024 22:41

கரையோர மக்கள் வேகமா வந்து குடம் பானை சும்பு , டம்ளர் , அண்டா குண்டா ,எல்லாத்திலும் முடிஞ்சா அளவு தண்ணீரை மொண்டு வச்சிக்கலாம் , காசு எல்லாம் வசூலிக்க மாட்டோம் , இப்படிக்கு விடியா மூஞ்சி - -


rama adhavan
ஜூலை 30, 2024 21:33

ஒரே வழி, கடலை காத தூரம் தள்ளி வைக்க வேண்டியது தான்.


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:40

தமிழகத்தில் ஏரி குளங்கள், இருந்திருந்தால் அவற்றில் ஆற்றுநீரை சேமித்திருக்கலாம். ஏரிகுளங்களை ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விற்றால் எப்படி தண்ணீரை சேமிக்கமுடியும். காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு சில அணைகளை கட்டியிருந்தால் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமித்திருக்கலாம். அணைகளை கட்டுவதை விட்டுவிட்டு, திருட்டு ரயில் ஏரிக்கு சிலைகளை கட்டினால் எப்படி தண்ணீரை சேமிக்கமுடியும்?


Iniyan
ஜூலை 30, 2024 18:39

இந்த நீதி மன்றங்களால் என்ன செய்திவிட முடியும்? சும்மா காலத்தை ஓட்ட ஏதாவது வழக்கு ஒரு விசாரணை.


KRISHNAN R
ஜூலை 30, 2024 16:19

வரும் ஆனா வராது


என்றும் இந்தியன்
ஜூலை 30, 2024 16:18

திராவிட மடியல் அரசின் பதில் இப்படி இருக்கும் "மக்கள் தங்கள் தங்கள் வீட்டு தொட்டியில் தண்ணீர் சேமித்துக்கொள்வதால் கடலில் நீர் கலப்பதில்லை "


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி